தென்கொரிய நாட்டின் மத்திய பிராந்தியத்தில் உள்ள விவசாய பகுதியில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
தென்கொரியாவின் வானிலை நிறுவனம் கூறுகையில்,
இந்தாண்டு ஏற்பட்ட 38 நிலநடுக்கங்களில், கோசன்நகரில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் வலிமையானது.
இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவானது, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய வடக்கு சுங்சியோங் மாகாணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து நிலநடுக்கம் ஏற்பட்டதாக, குடியிருப்பாளர்களிடமிருந்து 50க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்ததாக பாதுகாப்பு அமைச்சகத்தின் பேரிடர் தலைமையகத்தின் அதிகாரியான லீ ஜே-யோங் கூறியிருக்கிறார்.